Monday, September 19, 2011

வள்ளலார் அறியாத இரக்கம்!

உயிர்கொலை தவிர்த்தல் மற்றும் பசியால் வருந்துவபவ்ர்களுக்கு காட்டுவது மட்டுமே  இரக்கம் என்ற அளவில் நினைத்து கொண்டிருந்த எனக்கு... அதை தாண்டிய இரக்கம் ஒன்று இருக்கிறது என்று வள்ளலாரின் பாடலை திருவருட்பாவிலிருந்தும் விளக்க உரையை "திருவருட்பா பாமாலை” என்ற புத்தகத்திலிருந்தும் எடுத்து பதிந்திருக்கிறேன். 




இரக்கம் என்ன என்பதை நான் அறிய வில்லையே என வள்ளலார் சொல்லும் பாடல்...



“இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
ஞான மேவுதற் கென்செயக் கடவேன்”



இரக்கம் என்பது ஒர் எட்டு - துணை!


நமக்கு இரக்கம் - அன்பு - கருணை பிறக்க வேண்டுமானால் நமக்கு எட்டு துணையாக வேண்டும்.


எட்டு - 8 - அ - கண்மணி ஒளி!


நம் கண்மணி ஒளியானது நமக்கு துணையானாலே நாம் இரக்கம் உள்ளவர் ஆவோம்!!!




சித்தர்கள் மற்றும் வள்ளலாரை பின்பற்றும் மக்கள் அன்னதானம் (அ) சைவம் (அ) ஒழுக்கம் என்ற ஏதோ ஒரு வகையில் நின்று விடாமல் இந்த மூன்றுடனும் சேர்ந்து தவம் (அ) சும்மா இருந்து இந்த இரக்கத்தை எட்டு என்பதன் மூலமாக அறிந்து தனிப்புரும்கருணை யை எட்டுமாறு அருட்பெரும்ஜோதியை வேண்டுகிறோம்.